தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (ஒகஸ்ட் 16) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கத்துடன், இலங்கை கடற்படையினர் தீவைச் சூழவுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகள் முழுவதும் வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான நடவடிக்கையில், நேற்று ஒகஸ்ட் 16ஆம் திகதி, குருசபாடு அருகே கடலில் சந்தேகத்திற்கிடமான படகை கண்டுள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து, வேறு நாட்டுக்கு சட்டவிரோதமாக கடல்வழியாக குடியேற முயன்றதாகக் கருதப்படும் 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

இரண்டு படகு நடத்துநர்கள் உட்பட நான்கு ஆண்கள், 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.

Share.
Exit mobile version