கடந்த வாரத்தில் 1,590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50.8% நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

56 MOH பிரிவுகள் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்களாக கணக்கிடப்பட்டுள்ளதாக NDCU குறிப்பிட்டுள்ளது.

அக்குறணை, மாத்தளை மாநகர சபை, அம்பலாங்கொட, வாரியபொல, அஹெலியகொட, எம்பிலிபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகியவை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை 50,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version