கொழும்பை வந்தடைந்த ஒரு கப்பலில் இருந்து 100,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதன்படி, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என CPC இன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், 120,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் ஒகஸ்ட் 29 ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது என்று சிபிசி தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version