இந்த வாரத்திற்கு மேல் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடு ஸ்திரமான நிலைக்குத் திரும்பி வருவதால் இந்த வார இறுதிக்குள் அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் ஜூலை 18 முதல் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பின்னர் பாராளுமன்றம் நிறைவேறியது.

Share.
Exit mobile version