போராட்டக்காரர்கள் குழு ஒன்று அமைச்சர் டி. பி. ஹேரத்தின் வீட்டை முற்றுகையிடும் முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாரியபொலவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று நேற்று (24) மாலை இவ்வாறு முயற்சித்ததையடுத்து, பொலிஸார் தலையிட்டு அதனைத் தடுத்ததாக தெரிய வருகிறது.

வாரியபொல, எலவிட்டிகம பிரதேசத்தில் இவரது வீடு அமைந்துள்ளது.

அப்போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என்றும், அந்த வீட்டுக்குச் செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததாகவும் தகவல் வெளியானது.

எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டிற்கு முன்னால் சுமார் ஒரு மணி நேரம் கோஷங்களை எழுப்பினர், பின்னர் கலைந்து சென்றனர்.

Share.
Exit mobile version