மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக நேற்றிரவு இடம்பெற்ற போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்களின் போராட்டத்தை செய்தியாக்கிய சுமேதா சஞ்சேவா உட்பட பல ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சஞ்சேவாவை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட்ட பின்னர் பொலிஸாரால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

காயமடைந்த ஊடகவியலாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும், பொலிஸார் அவரை பஸ்ஸில் ஏற்றி நீதிமன்றில் முற்படுத்தியதாக அவர் கூறினார்.

Share.
Exit mobile version