இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ். போதானா வைத்தியசாலையிலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா ஐ.பி.சி தமிழ் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக அத்தியாவசியம் தவிர்ந்த, ஏனைய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

குருதிப் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை ஆய்வுகூட பரிசோதனைகளைக்கூட செய்யமுடியாத அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

Share.
Exit mobile version