இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,500 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 02 மரணங்களுடன், *இலங்கையில் இதுவரை 16,502 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.*

இவ்வாறு மரணமடைந்தவர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 01 ஆண் மற்றும் 01 பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version