பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சீனாவினால் கடனுதவி அடிப்படையில் இவ்வாறு பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

முதற்கட்ட நடவடிக்கையாக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் குறைந்தது 100 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

Share.
Exit mobile version