ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 1 இன் ஒழுங்குமுறை 4(7) இன் கீழ் நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகத் தமிழ் மன்றம், பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸ் (ATC), தமிழீழ மக்கள் கூட்டமைப்பு, தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை 2021 இல் பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.

Share.
Exit mobile version