சுங்க அதிகாரிகளாக காட்டிக்கொண்டு இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும், இலங்கையைச் சேர்ந்த முகமது நஜ்மின் (31) மற்றும் செல்லையா அரவிந்தன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை தங்களை சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த 47 வயதான நதிஷா ரோஷினி என்பவரை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக கூறி, நகை மற்றும் வளையல்களை இருவரும் எடுத்துச் சென்றுள்ளனர். சந்தேகமடைந்த அவர், சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், பொலிசாரிடமும் சென்று புகார் அளித்ததை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version