இலங்கையின் சுகாதாரத் துறையானது குரங்கம்மை பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

குரங்குக் காய்ச்சலை பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனம் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக டாக்டர் ஹம்தானி தெரிவித்தார்.

உரிய உபகரணங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version