சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒகஸ்ட் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் இன்று (13) நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் போது அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version