மின்சார கட்டண அதிகரிப்பினால் அனைத்து மக்களினாலும் கட்டணத்தை ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் மின்சாரக் கட்டணச் சலுகை பெறுவதற்குரிய தகுதியான குழுக்கள் தொடர்பில் தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version