கடந்த ஜூலை 9 ஆம்திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சமூகவலைத்தளங்கள் மற்றும் சிசிடீவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நபர்களின் புகைப்படங்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள், 071-8591559, 071-8085585, 011-2391358 அல்லது1997 ஆகிய எண்களை தொடர்புகொள்ளுமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

Share.
Exit mobile version