லுணுகல, உடகிருவ வனப் பகுதியில் உள்ள பிரதேசத்தில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து,14 வயதுக்குட்பட்ட சிறுமியைக் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இச் சிறுமி கடந்த ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடத்திச் சென்று 08 நாட்களாக உடகிருவ வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட உள்ளார்.

Share.
Exit mobile version