மகா பருவ பயிர்ச்செய்கைக்காக 100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த யூரியா உரம் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரும் என வர்த்தக உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வருட மகா பருவத்தில் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version