கடந்த 1ம் திகதி நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி – கெட்டபுலா அக்கரவத்தை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு காணாமல்போன 3 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர்களை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் போனவர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டது.

அத்துடன் காணாமல் போன மேலும் இரண்டு பேரை கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Exit mobile version