பிஸ்கட் நிறுவனங்களின் விலையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருளாக அறிவித்து நுகர்வோர் சேவை அதிகார சபையின் அங்கீகாரத்தின் கீழ் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுடன் நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share.
Exit mobile version