கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரு பெண்களை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (11) கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாணந்துறை பிரதேசத்தில் இரண்டு வர்த்தக நிலையங்களை நடத்திவருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version