எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30மணியில் இருந்து மாலை 4.30 மணிவரை மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெற உள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022 குறைநிரப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் காலை 9.30.மணியில் இருந்து மாலை 4.30 மணி வரையும் நடத்தவும் இன்று இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version