யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய உதயசங்கர் நிவேதிகா, 22 வயதுடைய மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப் பரீட்சைக்கு மருத்துவப் பிரிவில் தோற்றிய இவ் மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னரே தவறான முடிவொன்றை எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார். தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் மாணவி நேற்று (09) மாலை தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version