முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் கிரனைட் குவாரி ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முல்லேரியா பிரதேச சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார். 

கைது செய்யப்பட்ட நபரை கடுவலை பகுதியில் உள்ள கிரனைட் குவாரி ஒன்றிற்கு ஆயுதங்களை தேடுவதற்காக அழைத்து செல்லப்பட்ட போது அவர் அங்கு தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version