மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு பொருத்தமான திருத்தங்கள் உட்பட தற்போதைய மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்குள் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்களை பிரபலப்படுத்துவதற்கு மின்சார முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு பல தரப்பினர் சந்தர்ப்பம் கோரியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய சட்டத்தில் தேவையான விதிகள் எதுவும் கிடைக்காததால், மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

Share.
Exit mobile version