பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் விசாரணை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்ற போது குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Share.
Exit mobile version