யால அறுவடை பருவத்திற்கு தேவையான எரிபொருள் அளவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விவசாயிகளுக்கு தேவையான அளவு டீசல் வழங்கப்பட்டு வருவதாகவும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் டீசல் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் அறுவடை நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விவசாயப் பிரதிநிதிகள் நேற்று (8) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்தித்து நெல் அறுவடை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

Share.
Exit mobile version