அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து இன்று (9) கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால் செவ்வாய்க்கிழமை (9) கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்ய உத்தரவிடக் கோரிய கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (8) நிராகரித்துள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.

போராட்டத்தின் போது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டாலோ அல்லது சொத்து சேதம் ஏற்பட்டாலோ, அதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க சிறிலங்கா காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று தலைமை நீதவான் வலியுறுத்தினார்.

Share.
Exit mobile version