தேசிய எரிபொருள் பாஸ் QR முறைமை மீண்டும் புதிய பதிவுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

ட்விட்டர் செய்தியில், மோட்டார் வாகனத் திணைக்களம் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளை முடித்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்மூலம் தற்போது மீண்டும் புதிய பதிவுகளை மேற்கொள்ளும் முறைமை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.( https://fuelpass.gov.lk/login )

புதிய பதிவுகள் 48 மணிநேரத்திற்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

இதன்போது, ​​தற்போது பதிவு செய்த பாவனையாளர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் கணினியைப் பயன்படுத்துவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெளிவுபடுத்தினார்.

திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு திறக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version