இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கிறது.

இதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இலங்கையின் நாணய மாற்று விகிதம் காரணமாக வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த கட்டண மாற்றம் அமுலாகும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version