இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று கடந்த 19 ஆந் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் அவர் இதன் போது நினைவு கூர்ந்தார்.

இலங்கையை தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்பதற்காக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.

Share.
Exit mobile version