ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், ஏப்ரல் 19 அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இவ்வறிவிப்பை விடுத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ரம்புக்கனை பிரதேசவாசிகள் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version