இன்றைய தினம் QR முறைமைக்கு அமைய நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதோடு

எரிபொருளுக்கான வரிசை தற்போது குறைவடைந்தும் உள்ளது.

அத்தோடு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடும் கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு கனியவள கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும் , QR முறைமைக்கு அமைய போதுமான எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் தங்களது வாகனங்களுக்கு போதுமான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகனங்களின் ஒன்றியம் கோரியிருந்தது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறித்த கொள்கலன் தாங்கி ஊர்திகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.

Share.
Exit mobile version