வெள்ளிக்கிழமை (05) அதிகாலை வத்தளை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இனந்தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 35-40 வயதுடையவராகவும் அண்ணளவாக 5 அடி 8 அங்குல உயரமுடையவராகவும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் யாருடையது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share.
Exit mobile version