கண்டி, கட்டம்பேயில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவிழா ஒன்றில் மதுபோதையில் இருந்த கூட்டத்தை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 30 மற்றும் 46 வயதுடைய உடபேரதெனிய மற்றும் பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version