மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

SLTB டிப்போக்களுக்கு மேலதிகமாக, பஸ்டியன் மாவத்தை பஸ் முனையம் மற்றும் மகும்புர எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் இந்த பஸ்களுக்கு எரிபொருள் நிரப்ப முடியும் என NTC பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

தனியார் பஸ் சங்கங்கள் நேற்று (05) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அன்றைய தினமே அதனை கைவிட்டன. தொடர்ந்து எரிபொருள் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால், பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

Share.
Exit mobile version