முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் போராட்டம் நடத்தியமை தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 06 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ஹிருணிகா மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த குழுவை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

மேலும் முறையான விசாரணைகளை நடத்தி மீண்டும் கோரிக்கையை சமர்பிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Share.
Exit mobile version