QR குறியீட்டு முறைமையின் ஊடாக ஒதுக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தமது சங்கமும் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பல தனியார் பஸ் சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தினால், பல பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Share.
Exit mobile version