டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்தீரதன்மை இன்மை காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான வீசா மற்றும் ஏனைய சேவை கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version