நாடு முழுதும் பாடசாலைகள் அடுத்த வாரம் நடத்தப்படும் விதம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களிலும் பாடசாலைகள் இடம்பெறும்.

வியாழக்கிழமை வழமையாக பாடசாலை நடத்தப்படுகின்ற போதும், வியாழக்கிழமை (11ஆம் திகதி) போயா தினம் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இணைவழியில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version