பல தனியார் பேருந்து சங்கங்கள் நேற்று (04) நள்ளிரவு முதல் பேருந்துகளை இயக்குவதை நிறுத்தியுள்ளன.

QR குறியீட்டு முறைமையின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை குறைப்பது பஸ் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடாமல் ஒரே கருத்தின் அடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் எடுத்த தீர்மானம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version