சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3 மணிக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

Share.
Exit mobile version