இலங்கையில் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கான விடுமுறைகளை மேலும் ரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனமான டியுஐ(TUI) அறிவித்துள்ளது. இச் செய்தியை இங்கிலாந்தின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதன்போது போராட்டக்காரர்கள் அரச கட்டிடங்களை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்த கடந்த மாதம் இலங்கை அரசாங்கம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டியுஐ கடந்த மே மாதம் முதல் இலங்கை விடுமுறைகளை ரத்து செய்து வருகிறது. இதன்படி தற்போது ஆகஸ்ட் 22 வரையான பயணங்களை அந்த நிறுவனம் ரத்துச்செய்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற பயணங்களை தவிர்க்குமாறு வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

இதன் விளைவாகவே துரதிர்ஷ்டவசமாக 22 ஒகஸ்ட் இலங்கைக்கு புறப்படும் அனைத்து பயணங்களையும் ரத்து செய்ய வேண்டியேற்பட்டுள்ளது என்று டியுஐ குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவுரை பொருந்தாது என்று டியுஐ அறிவித்துள்ளது.

Share.
Exit mobile version