பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டும் முகம் மறைக்கப்பட்டும் மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்த அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லஞ்சிய பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் மாவட்டத்தின் ரொட்டாவ சீப்புக்குளத்தில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு சிறுமியே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

இச்சிறுமி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​ வயல்வெளியில் உள்ள மரம் ஒன்றில் இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் தகவல் கிடைத்ததனையடுத்து கல்லஞ்சிய பொலிஸ் பொறுப்பதிகாரி உட்படலானோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியை மீட்டனர்.

சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version