இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mizukoshi Hideaki புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை 28 ஜூலை 2022 அன்று அமைச்சில் சந்தித்தார்.

அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மிசுகோஷி ஆகியோர் இந்த ஆண்டு 70வது ஆண்டு நிறைவை எட்டிய பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

ஜப்பானிய அரசாங்கம் சரியான நேரத்தில் வழங்கிய உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சவால்களைத் தணிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார்.

இந்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜப்பான் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Share.
Exit mobile version