கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) மேற்கொண்ட சோதனையின் போது, ​​சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 3 கிலோ 158 கிராம் தங்கம் மற்றும் 39 கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களில் அக்குறணை, நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 45 மற்றும் 51 வயதுடைய நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் இருந்தனர்.

Share.
Exit mobile version