கொழும்பு 03 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்றிரவு (ஓகஸ்ட் 01) பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 18 மற்றும் 22 வயதுடையவர்கள், மடபாத மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம், ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்களை வட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்புகள் ஊடாக 0718 594950 / 0718 594929 / 0112 422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share.
Exit mobile version