இன்று (01) காலை 10.50 மணியளவில் அம்பாறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.

குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தற்கொலை முயற்சியில் பொலிஸ் பரிசோதகரின் மூளை துப்பாக்கிச் சூட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அம்பாறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version