இலங்கையின் யூடியூபர் ரதிது சுரம்யா என்ற ரட்டாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரட்டா மற்றும் மேலும் இரெண்டு பேருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்துள்ளது.

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய செயற்பாட்டாளராக ரட்டா அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் கோட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Share.
Exit mobile version