கல்கிசையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தவர் 31 வயதான படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version