முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல் முரண்பாடுகள் உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று பில்லியன் டொரலர்களுக்கு மேல் இலங்கை தேட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த தொகை அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள், உணவு மற்றும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version